தொழிலாளர்கள் உறுதி மொழி
தொழிலாளர்கள் உறுதி மொழி
சிஐடியு பொன்விழா ஆண்டு நினைவு கல்வெட்டு கோவூர் துணை மின்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டை தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் புதனன்று (ஜூன் 26) திறந்து வைத்தார். போரூர் கோட்டச் செயலாளர் வி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
சிஐடியு பொன்விழா ஆண்டையொட்டி வேலூரில் மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. ‘தொழிற்சங்க வரலாறு’ என்ற தலைப்பில் சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், மாவட்ட நிர்வாகிகள் பரசுராமன், நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் 50 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி புதுச்சேரி முதலியார்பேட்டை கடலூர் சாலையில் அமைந்துள்ள சிஐடியு பிரதேசக்குழு அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.